INTERNATIONAL TAMIL RADIO FRANCE
Tamil Entertainment Radio
89.3 fm Canada, Montreal, Quebec , Tor0nto
1981 இல் ஐரோப்பாவில் முதன்முதலாக ஒலித்த தமிழ் வானொலியின்
அறிவிப்பாளர் என்ற பெருமையுடன்
சரவணையூர் விசு செல்வராசாவினால்
ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச தமிழ் வானொலி இன்று தனது இருபத்திஓராவது
வருடத்தை பூர்த்தி செய்து இன்று இருபத்தியிரண்டாவது வருடத்தில்
கால் பதிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் நேயர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்
காலைக்கதம்பம்
இன்றையநாள் எப்படி
நாளும் கோளும் ராசிபலன்
முகநூல் தகவல்
உறவுகள் பேசும்
உங்கள் உள்ளம் கவர்ந்த ராகங்கள்
செய்திகள்
தினமும்
தமிழகத்தில் இருந்து நெற்றிக்கண் மனோகரன் வழங்கும்
இந்தியா இன்று
சனிக்கிழமைகளில்
ஜெர்மனியில் இருந்து ஞானலிங்கம் வழங்கும்
மறக்கமுடியுமா
தினமும் இத்தாலியில் இருந்து குமரன் வழங்கும் நெஞ்சம் மறப்பதில்லை
இத்துடன் தினமும் பல பல்சுவை நிகழ்ச்சிகளுடன்
சர்வதேச தமிழ் வானொலி உங்களை மகிழ்விக்க வருகிறது
உங்களை அனைத்து வாழ்த்து நிகழ்சிகளையும் இலவசமாக எமது வானொலியூடாக பகிர்ந்து மகிழுங்கள்
Tel 05 62 94 35 38. Fax. : 05 62 94 35 38. E-mail : sundar199@hotmail.com.
லூர்து நகரில் முதல் தமிழர்
தங்கு விடுதி
இலங்கை இந்திய உணவுகளுடன் அன்புடன்
உங்களை வரவேற்கிறது
HOTEL VIEUX LOURDES
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்யும், விவகாரம் இப்பொழுது ஆளுநர் கையில் தான் உள்ளது
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்யும், விவகாரம் இப்பொழுது ஆளுநர் கையில் தான் உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது சிபிஐயால் விசாரிக்கப்பட்டது என்பதால் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தை நாடியது மத்திய அரசு. ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்ய சட்டப்பிரிவு 435 கீழ் மத்திய அரசு அனுமதி அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டில் வாதம் முன்வைக்கப்பட்டது. சட்டப்பிரிவு மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த போது சட்டப்பிரிவு 435ன் கீழ் தான் விடுதலை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட சட்டப்பிரிவு 161ன் கீழ் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதற்கு பரிந்துரை செய்ய முடியும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இறுதி முடிவு எனவே தமிழக அரசுக்கு ஏழு பேரை விடுதலை செய்யும் அதிகாரம் உள்ளது என்றாலும் கூட, அதில் இறுதி முடிவு எடுக்கப் போவது என்னவோ ஆளுநர்தான் என்பதுதான் இதில் முக்கியமான விஷயம். ஏனெனில் மாநில அரசால் செய்ய முடிவது என்னவென்றால் அமைச்சரவையை கூட்டி ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி அதை மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு, அனுப்பி வைப்பது மட்டுமே. சிறை கைதிகள் விடுதலை அரசு 161 வது விதியின் கீழ் எடுத்த இந்த முடிவை ஏற்பதும், அல்லது, அதில் திருத்தங்கள் செய்வதும், ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். இதற்கு உதாரணம் கூற வேண்டுமானால், தலைவர்களின் பிறந்த நாட்களின் போது நன்னடத்தை அடிப்படையில் நீண்ட காலம் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யும் முடிவை மாநில அரசு எடுப்பது வழக்கம். அதுபோல ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு பரிந்துரை செய்யத்தான் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு அனுப்பப்படும் பட்டியலில் ஆளுநர், திருத்தங்கள் செய்த மரபு இதற்கு முன்பாக உள்ளது. எனவே மாநில அரசு எடுக்கும் முடிவுக்கு அப்படியே ஆளுநர் சம்மதிப்பார்என்றுஉறுதியாகக்கூறமுடியாது.மத்தியஅரசின் பங்கு ஆளுநர் என்பவர் மாநிலங்களின் முக்கிய நிலவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கையாக அனுப்ப கூடியவர். எனவே முன்னாள் பிரதமர் ஒருவரின் கொலை வழக்கு சம்பந்தப்பட்ட முக்கியமான விஷயத்தில், சிறையில் உள்ளோரை விடுதலை செய்வது தொடர்பான நடவடிக்கையை தன்னிச்சையாக எடுக்க வாய்ப்பில்லை. மத்திய அரசின் ஆலோசனை அவர் பெறக்கூடும். எனவே ஆளுநர் மத்திய அரசிடம் கலந்தாலோசித்த பிறகு, என்ன முடிவை அறிவிக்கப் போகிறார் என்பதில்தான், ஏழு பேரின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்கிறார்கள் சட்ட வல்லுனர்கள்.
தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும். நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும்.
ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும். வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்
தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது. பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன.
நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.
ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.
இயற்கை தந்துள்ள வரப்பிரசாதமான இளநீர், ஒரு முழுமையான சத்துள்ள நீராகும். இந்திய மருத்துவ முறையில் இளநீர் பெரும்பங்கு வகிக்கிறது. இளநீர் ஒரு சிறந்த டானிக்காக வயதானவர்களுக்கும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பயன்படுகிறது. இளநீர் இரத்தத்தைத் சுத்தப்படுத்தும்.
இரத்தத்தில் கலந்துள்ள தேவையறற அசுத்த நீர்களை நீக்கும். இரத்தச் சோகையை போக்குகிறது. இரத்தக் கொதிப்பைக் குறைக்கும் சக்தி இளநீருக்கு உண்டு. இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.
கோவைக்காய் இலை இருமல், ஆறாத புண்கள், சிரங்கு, உடல் சூடு, நீர்ச் சுருக்கு ஆகியவற்றைப் போக்கும். கோவைக்காய், கரப்பான், ஜலதோஷம், நீரழிவு போன்ற நோய்களுக்கு மருந்தாகும். கோவைக்காய் வேர், குஷ்டம், பிரமேகம், வாத நோய்கள் ஆகியவற்றுக்கு மருந்தாகும்.
சர்க்கரை நோயாளிகள் தினமும் கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவைக்காய் நார்ச்சத்து நிரம்பியது அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம்
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம்.
நீரிழிவுக்காரர்களுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இல்லை என்கிறார்கள். குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது முருங்கை.
முருங்கையின் மூலம் கிடைக்கிற புரதமானது முட்டை, பால் மற்றும் இறைச்சியில் கிடைக்கக்கூடிய புரதத்துக்கு இணையானது. மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத 8 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இறைச்சியில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.
பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடிப்பது நல்லது.
பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்வதால், நம் உடலில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்து, தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் ஆண்மையை அதிகரிக்கும் மிக சிறந்த ஜூஸாக உள்ளது.
பீட்ரூட் ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும்.
ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும், ஆண்மை குறைவிற்கு காரணமாக அமையும். இந்த தருணத்தில் பீட்ரூட் ஜூஸை எடுத்துக் கொண்டால், ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொண்டு ஆண்மை பிரச்சனை வராமல் இருக்கும்